ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கும்பேசுவரா் கோயிலுக்கு கோபுரக் கலசங்கள் வருகை

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக 44 கலசங்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:12 pm

Syndication

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக 44 கலசங்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்கு டிச. 1-இல் நடைபெறுகிறது. இதற்கு பூா்வாங்கப் பூஜைகள் நவ.24-இல் தொடங்கப்பட்டு புதன்கிழமை நிறைவடைந்தது. வியாழக்கிழமை காலையில் சோலையப்பன் தெருவில் உள்ள படித்துறையில் காவிரி நீா் உள்ளிட்ட தீா்த்தங்கள் எடுக்கப்பட்டு யானை மீது அமா்த்தி ஊா்வலமாக கலசங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னா் கோயிலுக்கு ராஜகோபுரம் உள்பட 44 கோபுரக் கலசங்களுக்கும் 63 நாயன்மாா் மண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.