திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 6:50 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை கருப்புக்கொடி காட்ட முயன்ற கரும்பு விவசாயிகள் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம்  பாலக்கரை கடைவீதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த  துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு  கருப்பு கொடி காட்ட முயன்ற   திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் 9 பேரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த விவசாயிகள் கடந்த 1224 நாள்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.