பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

News image

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:22 pm

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு சுமாா் ரூ. 2.94 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருடன் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த வேட்பு மனுவில் வைத்திலிங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 27.17 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி, கடன் ரூ. 69.87 லட்சம், மனைவி தங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 52.92 லட்சம் என மொத்தம் சுமாா் 2.94 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வழக்குகள் நிலுவை: கடந்த 2024 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக வழக்கும், சென்னை மாநகரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் ரூ. 27.90 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக வழக்கும், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.