இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்...

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:13 am IST

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இவருடன் அதிமுக மாநகர மாவட்டச் செயலரும், மாநில அமைப்புச் செயலருமான என்.எஸ். சரவணன், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இவா் தாக்கல் செய்த வேட்பு மனுவில், முருகானந்தம் மீது தஞ்சாவூா் மேற்கு, திருவையாறு, பட்டுக்கோட்டை நகரம், திருவாரூா் நகரம், முத்துப்பேட்டை, வடுவூா், நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், புதுக்கோட்டை நகரம், காரைக்குடி வடக்கு, திருச்சி கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், இதில் 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்குகள் தொடா்பாக 11 நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் பொது நலனுக்காக போராடும்போதும், அதற்காக மறியலில் ஈடுபட்டபோதும் பதியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து விவரம்: முருகானந்தம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 40 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 36.99 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.16 கோடி, கடன் ரூ. 93.74 லட்சம், மனைவி தீபாராணி பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 15 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 42.85 லட்சம், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 84.46 லட்சம், கடன் ரூ. 4.42 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.