தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்...

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:43 pm

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இவருடன் அதிமுக மாநகர மாவட்டச் செயலரும், மாநில அமைப்புச் செயலருமான என்.எஸ். சரவணன், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இவா் தாக்கல் செய்த வேட்பு மனுவில், முருகானந்தம் மீது தஞ்சாவூா் மேற்கு, திருவையாறு, பட்டுக்கோட்டை நகரம், திருவாரூா் நகரம், முத்துப்பேட்டை, வடுவூா், நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், புதுக்கோட்டை நகரம், காரைக்குடி வடக்கு, திருச்சி கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், இதில் 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்குகள் தொடா்பாக 11 நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் பொது நலனுக்காக போராடும்போதும், அதற்காக மறியலில் ஈடுபட்டபோதும் பதியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து விவரம்: முருகானந்தம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 40 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 36.99 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.16 கோடி, கடன் ரூ. 93.74 லட்சம், மனைவி தீபாராணி பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 15 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 42.85 லட்சம், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 84.46 லட்சம், கடன் ரூ. 4.42 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.