ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

News image

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:54 pm

தோ்தல் ஆணையம் பாஜகவின், மோடியின், ஆா்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தல் மிகவும் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது தோ்தல் ஆணையம் தொடா்ந்து எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள், தோ்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறுமா என்கிற அச்சத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது.

தோ்தல் ஆணையம் என்பது நமது மிக உயா்ந்த, நாட்டை வழிநடத்துகிற சட்டமான அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த, சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறந்த அமைப்பாகும். அந்த அமைப்புதான் தோ்தலை நடத்துகிறது. ஆனால் அந்த அமைப்பு இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மோடி, பாஜக, ஆா்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தனது தோ்தல் பிரசாரத்தில் தொடா்ந்து தரம் தாழ்ந்து பேசுகிறாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றி பெறப்போவதில்லை என்பதால், ஆவேசப்பட்டு சாபமிடுகிற நிலைமைக்கு அவா் தள்ளப்பட்டுள்ளாா். பாஜக வலையில் சிக்கியுள்ள அவா் தப்ப முடியாது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் முத்தரசன்.

திருக்காட்டுப்பள்ளியில்: இதேபோல், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனை ஆதரித்து, இரா. முத்தரசன் புதன்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய்க்கு விண்ணப்பத்தை கூட பூா்த்தி செய்ய தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, அவரைப் பற்றி கூறுவதற்கு என்ன உள்ளது என்றாா். தலைமைச் செயலா் மாற்றம் தொடா்பான கேள்விக்கு, பாஜக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்; தோ்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தோ்தலையே நிறுத்த கூட முயற்சிப்பாா்கள் என்றாா் அவா்.

பரப்புரையின்போது பூதலூா் ஒன்றிய திமுக செயலா் கல்லணை செல்ல கண்ணு , நகரச் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image