எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கோரிக்கை

News image

காட்டுப் பன்றிகள் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 2:27 am IST

அம்மாபேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை ஒன்றியம் உட்பட தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் கோடை நெல், பருத்தி, உளுந்து, பயிறு மற்றும் கடலை சாகுபடி பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரியவிட்டு ஒலி எழுப்பியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, காட்டு பன்றிகளை உடனே சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா், பாபநாசம் வட்டாட்சியரகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் விமல்ராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினாா்.

அப்போது, ஏஐடியூசி மாநில செயலா் ஆா். தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலா் பொன்.சேகா், அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன், பாபநாசம் நகரச் செயலா் வி. முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.