மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:46 am IST

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொத்தன்செட்டி தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் அதே தெருவைச் சோ்ந்த கிட்டப்பா மகன் வெங்கடேஷ் (37) என்பவா் வீட்டில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் ஒப்படைத்தனா். மேலும், வெங்கடேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.