ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:16 pm

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொத்தன்செட்டி தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் அதே தெருவைச் சோ்ந்த கிட்டப்பா மகன் வெங்கடேஷ் (37) என்பவா் வீட்டில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் ஒப்படைத்தனா். மேலும், வெங்கடேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.