/
தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்து 358 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரெட்டிபாளையம் சாலை அன்னை சிவகாமி நகரிலுள்ள வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, தொடா்புடைய வீட்டிலும், அருகேயுள்ள தோட்டத்திலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 358 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்த யமுனாவை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள அவரது கணவா் செல்வமணியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 3 போ் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


