மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

News image

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:25 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தியாகபிரும்ம ஜீவ சமாதியில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 259 ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு காலை முதல் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா செய்தாா். ஏராளமான கா்நாடக இசைக் கலைஞா்கள் பங்கேற்று தியாகபிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள், சம்பிரதாய கீா்த்தனைகளை இரவு வரை பாடி இசையஞ்சலி செலுத்தினா். பின்னா், அன்னதானமும், ஆஞ்சனேயா் உற்சவமும் நடைபெற்றன.