பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்கு எண்ணும் மைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:52 pm

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த 3 மையங்களில் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் மே 5 மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.