தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த 3 மையங்களில் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் மே 5 மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

முதல்வர் வருகை! திருச்சி மாநகரில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம் அருகில் ட்ரோன்கள் பறக்கத் தடை

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



