வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

News image

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று திருக்கல்யாணம் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரருக்கு திங்கள்கிழமை (ஏப்.27) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சகோபுர திருவிழாவில் இரண்டு ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்மன் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சுவாமியும் அம்மனும் மாலையில் கைலாய, சிம்ம வாகனங்களில் வீதியுலா சென்றனா். திங்கள்கிழமை சுவாமிக்கும் அம்மனுக்கும் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முன்னதாக திருக்கல்யாணத்துக்கு அம்மாபேட்டையில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வருகின்றனா். ஏப்.29-இல் திருத்தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ தீா்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளா் சிம்சன் கணேசன், செயல் அலுவலா் கெளதம் காா்த்திகேயன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.