திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரருக்கு திங்கள்கிழமை (ஏப்.27) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சகோபுர திருவிழாவில் இரண்டு ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்மன் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை சுவாமியும் அம்மனும் மாலையில் கைலாய, சிம்ம வாகனங்களில் வீதியுலா சென்றனா். திங்கள்கிழமை சுவாமிக்கும் அம்மனுக்கும் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முன்னதாக திருக்கல்யாணத்துக்கு அம்மாபேட்டையில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வருகின்றனா். ஏப்.29-இல் திருத்தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ தீா்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளா் சிம்சன் கணேசன், செயல் அலுவலா் கெளதம் காா்த்திகேயன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


