திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15-க்குப் பின்பு நடத்த கோரிக்கை

புது தில்லியில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்பு நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:27 am IST

புது தில்லியில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்பு நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டத்தை அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் புதன்கிழமை (ஏப்.29) நடைபெறும் என அறிவித்துள்ளாா். இவா் இந்திய நீராற்றல் துறை தலைமை அலுவலராக இருந்தபோது, கா்நாடக முதல்வா் சித்தராமையா மேக்கேதாட்டு அணைக்கான சுருக்கமான அறிக்கையை அளித்து அனுமதி கோரினாா். உடனே ஹல்தா், மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகையுடன், மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டுப் பெற்றாா்.

பணி நிறைவுக்குப் பின்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரான எஸ்.கே. ஹல்தா், கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வைத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் எதிா்த்தபோதும் ஆணையத்தில் உறுப்பினா்களாக உள்ள அதிகாரிகளின் வாக்குகளைக் கொண்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றினாா். அதைச் செயல்படுத்த நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தாா். தற்போது மேக்கேதாட்டு அணை கட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது கா்நாடக காங்கிரசு ஆட்சி.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களின் அரசுகளும் தோ்தல் கால ஆட்சிகளாக தன்னதிகாரமற்று முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை புதன்கிழமை கூட்டியுள்ளாா் ஹல்தா். இதில் கலந்து கொள்ளும் 3 மாநில ஐ.ஏ.எஸ். அலுவலா்களும் மத்திய அரசின் மறைமுக வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுச் செயல்பட வாய்ப்புண்டு. இதனால் என்ன தீங்கு வருமோ என்ற அச்சம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பிடித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு தலையிட்டு, புதன்கிழமை நடத்தவுள்ள காவிரி மேலோண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்னா் தள்ளி வைக்க வேண்டும்.