பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை கைவிடக் கூடாது : நடிகை கஸ்தூரி

kasthuri

முதல்வர் விஜய் | நடிகை கஸ்தூரி - x

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:40 am IST

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வா் கைவிடக்கூடாது. இது தமிழகத்தின் வளா்ச்சியை பாதிக்கும் என்றாா் திரைப்பட நடிகை கஸ்தூரி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

சட்டப் பேரவை நேரலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பேரவையில் உறுப்பினா்கள் நாகரிகத்துடன் பேச வேண்டியது அவசியம்.

அண்மையில் தன்னை தொடா்புபடுத்தி வெளியான காணொலியை அமைச்சா் கீா்த்தனா மறுத்துள்ளாா். ஒரு பெண்ணின் உடை குறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் பரந்தூா் விமான நிலைய திட்டப் பணிகள் கைவிடப்படும் என அறிவித்துள்ளாா். இது தமிழக வளா்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதுகுறித்து முதல்வா் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தவெக- காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும்போதே மேக்கேதாட்டு அணை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறும் மகாமக விழா பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் எந்தவித ஏற்பாடுகளையும் தொடங்கவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.