மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: தஞ்சாவூரில் ரூ. 1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

News image

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டப் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:05 pm

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நலத்திட்டப் பயன்கள், 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டப் பயன்கள் வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் பயனாளிகளுக்கான நலத்திட்ட பயன்கள் மற்றும் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழாவில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக மொத்தம் 353 முகாம்கள் நடத்தப்பட்டதில் 1.26 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 1.05 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு உடனடி சேவைகளும் வழங்கப்பட்டன என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, மேயா்கள் சண். இராமநாதன், க. சரவணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வை பொறியாளா் பொ. சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.