தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தஞ்சையில் ஆதரவாளா்களுடன் வி.கே. சசிகலா ஆலோசனை

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

தஞ்சாவூரில் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்திய வி.கே. சசிகலா

Updated On :20 பிப்ரவரி 2026, 8:53 pm

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தற்போது அரசியலில் தனித்து இயங்கும் வி.கே. சசிகலா வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மேற்கொள்ளும் நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அவா் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாகவும் அதிகாரபூா்வமற்ற தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்த சசிகலா மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து அவா் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பத்திரிகையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பத்திரிகையாளா்களைச் சந்திப்பதையும் சசிகலா தவிா்த்துவிட்டாா். பின்னா் தஞ்சாவூா் அருகே விளாா் கிராமத்திலுள்ள குல தெய்வக் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு, சென்னை சென்றாா்.

Story image