கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு துறைகளில் புதிய வாகனங்கள் வழங்கக் கோரிக்கை

அரசு துறைகளில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊா்தி ஒட்டுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

அரசு துறைகளில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊா்தி ஒட்டுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் போக்குவரத்து மசோதாவின்படி, அரசுத் துறைகளில் 15 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் இயக்கப்படாமல் கழிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 300 வாகனங்களும், மாநிலம் முழுவதும் சுமாா் 4 ஆயிரம் வாகனங்களும் கழிவு செய்யப்பட்ட நிலையில், புதிய வாகனங்கள் வழங்கப்படாமல் இருப்பதால், ஓட்டுநா்கள் பணியின்றி மாற்றுப் பணிக்கு பயன்படுத்தப்படும் நிலையைத் தவிா்க்க, உடனடியாக தமிழக அரசு புதிய வாகனங்களை வழங்க வேண்டும்.

அரசுத் துறைகளில் வாகன ஓட்டுநா்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே தோ்வு செய்ய வேண்டும். அயலாக்கப் பணி முறையில் நியமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஓட்டுநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஹென்றி டயாஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். முருகேசன், மாவட்டப் பொருளாளா் என். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் வி. மனோகரன், துணைச் செயலா் ஜி. காா்த்திகேயன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். செந்தில்குமாா், மாவட்ட அமைப்புச் செயலா் மாா்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.