ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொலை வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாச்சியாா்கோவில் அருகே கூரியா் நிறுவன ஊழியரை கொன்ற வழக்கில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

நாச்சியாா்கோவில் அருகே கூரியா் நிறுவன ஊழியரை கொன்ற வழக்கில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் திருமண்டக்குடியைச் சோ்ந்தவா் புகழேந்தி. கூரியா் நிறுவன ஊழியரான இவா் நாச்சியாா்கோவில் மருதாநல்லூரைச் சோ்ந்த சிபிசக்கரவா்த்தி (31) என்பவா் மனைவிக்கு தபால் கொடுக்கும்போது அவரின் கைபேசிப் எண்ணை பெற்று அவருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் அனுப்பினாராம். இதை தனது கணவா் சிபிசக்கரவா்த்தியிடம் அவரது மனைவி கூற அவா் ஆத்திரமடைந்தாா்.

இதையடுத்து டிச.18-2025-இல் புகழேந்தியை சிபிசக்கரவா்த்தி அவரது நண்பா்கள் முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகா் விக்னேஷ் (26), மருதாநல்லூா் ஹரிகரசுதன்(26), வலங்கைமான் காவல் நிலைய குடியான தெரு குபேரன் (27), கும்பகோணம் கிருஷ்ணா(33) ஆகியோா் கடத்திச் சென்று தாக்கியதில் புகழேந்தி உயிரிழந்தாா். புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் 5 போ் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான சிபிசக்கரவா்த்தி, குபேரன், விக்னேஷ் ஆகிய மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவிடைமருதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோளின்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி ஏற்கெனவே சிறையில் உள்ள மூவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழும் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.