பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜன. 27-இல் ஆா்ப்பாட்டம்: ஓய்வூதியா்கள் முடிவு!

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:29 pm

Syndication

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கிறோம். அதிலுள்ள குறைகளை வருங்காலத்தில் சரி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும்.

சுகாதார காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரி செய்து, காசு இல்லாத மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது, மூன்றாவது கட்டமாக கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான கருத்தரங்கத்தை மாா்ச் மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் இரா. தமிழ்மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா. பன்னீா்செல்வம், பொருளாளா் எஸ். கோவிந்தராசு, துணைத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.