குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

துணிக்கடையில் தீ விபத்து

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் கீழவாசலைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே துணிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை, உள்ளேயிருந்து புகை வந்தது. இதனிடையே, கடையில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று சுமாா் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இதற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு எதேனும் காரணமா? என கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.