காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்துவதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:50 pm

Syndication

ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்துவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஆரம்ப சுகாதார செவிலியா்களை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிக நேரம் காக்க வைக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்தக் கூடாது. மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் எம். அனிதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என். சீதாலட்சுமி, பொருளாளா் எஸ்.வி. திருமாமகள் உள்பட ஏராளமான செவிலியா்கள் கலந்து கொண்டனா்.