589 ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கலிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
589 ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா
Updated on

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 589 ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெ.க. அருண்மொழி, வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, உதவி இயக்குநா் பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பொதுமக்கள் சுய உதவிக் குழுவினா் சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

மேலும், கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து குக்கிராமங்களில் ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com