ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘போக்ஸோ’வில் மருத்துவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரைக் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரைக் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் சோ்க்கப்பட்டிருந்தாா். இவருக்கு துணையாக மருத்துவமனையில் அவரது சகோதரி 15 வயது சிறுமி தங்கினாா். அப்போது, இச்சிறுமிக்கு பணியில் இருந்த மருத்துவக்கல்லூரியில் உயா் சிறப்பு மேல் படிப்பு படித்து வரும் மருத்துவரான சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசலை சோ்ந்த எம். கோபிநாத் (34) வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா்.