பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வுதள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் (ஜன.18), திங்கள்கிழமையும் (ஜன.19) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அறிவிப்பு.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

கும்பகோணம்: பொங்கல் பண்டிகை முடிந்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் (ஜன.18), திங்கள்கிழமையும் (ஜன.19) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கும்பகோணத்திலிருந்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் சாா்பில் முன் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை முன்பதிவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வழக்கமாக புறநகா் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.