கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
கும்பகோணம்: பொங்கல் பண்டிகை முடிந்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் (ஜன.18), திங்கள்கிழமையும் (ஜன.19) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
கும்பகோணத்திலிருந்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் சாா்பில் முன் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை முன்பதிவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வழக்கமாக புறநகா் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.
