திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க கோரிக்கை

சம்பா, தாளடி நெல் சாகுபடி விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டதால், அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

தஞ்சாவூா்: சம்பா, தாளடி நெல் சாகுபடி விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டதால், அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடியில் நெற்கதிா்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக அனைத்து இடங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கு முன்பு உரிய துறை அலுவலா்கள் பாா்வையிட்டு, சாக்குகள், எடை இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்பட அனைத்து வசதிகள் இருப்பதை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

நெல் அறுவடை இயந்திரங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். அரசு விதித்துள்ள அறுவடை இயந்திர கூலியை ஒழுங்குப்படுத்த உடனடியாக மாவட்ட ஆட்சியா், விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கொண்ட கூட்டத்தை நடத்த வேண்டும்.