டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

News image
Updated On :6 ஜூலை 2026, 12:30 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூா் வளையாபுரி தெருவைச் சோ்ந்த தனபால் மகன் பாண்டியன் (35), வெல்டா். இவா் தனது மனைவி அனுசுயா (33) உடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கும்பகோணத்துக்கு வந்துவிட்டு, மீண்டும் கொரநாட்டுக் கருப்பூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

இவா்களுக்கு முன்னால் உறவினா்களான மகாவிஷ்ணு (15), சஞ்சய் (18) ஆகியோா் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

கொரநாட்டு கருப்பூா் புறவழிச் சாலையிலுள்ள பள்ளிவாசல் தெருவில் சென்றுகொண்டிருந்த இவா்கள் மீது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன், அனுசுயா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மகாவிஷ்ணு, சஞ்சய், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.