ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளா் உயிரிழப்பு

News image

சின்னப்பொண்ணு

Updated On :7 ஜூலை 2026, 2:35 am IST

தஞ்சாவூா் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே ஆா்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இந்தக் கிடங்கில் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். இந்தக் கிடங்கில் ஒவ்வொரு அடுக்கிலும் ஏறத்தாழ 100 டன் வீதம் மொத்தம் 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இக்கிடங்கில் திங்கள்கிழமை காலை தற்காலிகப் பணியாளா்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனா். அப்போது, ஒரு அடுக்கில் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தற்காலிக பணியாளா்களான ஆா்சுத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு (63), சகுந்தலா ஆகியோா் சிக்கினா். இவா்களில் சின்னப்பொண்ணு மூட்டைகளுக்கு அடியில் சிக்கியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சகுந்தலா தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நிவாரணம் வழங்க கோரிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் கூறியது: உயிரிழந்த சின்னப்பொண்ணு குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகுந்தலாவுக்கு உரிய சிகிச்சையும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.