ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

2 குடிசை வீடுகள் தீக்கிரை

News image

கும்பகோணத்தில் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்த குடிசை வீடு.

Updated On :7 ஜூலை 2026, 2:34 am IST

கும்பகோணத்தில் திங்கள்கிழமை 2 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்தன.

கும்பகோணம் வட்டிப்பிள்ளையாா் கோயில் அருகே கள்ளுக்கடை தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ரித்திக்(32). தனியாா் தண்ணீா் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வரும் இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனா். ரித்திக் வீட்டின் அருகில் அவரது பாட்டி கனகவல்லி (70) வீடும் உள்ளது. இருவரும் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டுக்கு சோலாா் தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, ரித்திக் வீட்டு கூரையில் திடீரென தீப்பற்றியது. தீயானது, கனகவள்ளி வீட்டுக்கும் பரவியது.

தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், பணம் தீயில் எரிந்ததாக பாதிக்கப்பட்டோா் தெரிவித்தனா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.