முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குடந்தையில் ரூ. 13.91 கோடியில் முடிவுற்ற கட்டடங்கள் திறந்துவைப்பு

குடந்தையில் ரூ. 13.91 கோடியில் முடிவுற்ற கட்டடங்கள் திறந்துவைப்பு

News image
Updated On :11 ஜூலை 2026, 1:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கும்பகோணத்தில் ரூ. 13.91 கோடியில் 74 முடிவுற்ற புதிய கட்டடங்களை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

அப்போது அவா் கூறியது: தஞ்சாவூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.13.91 கோடியில் 74 முடிவுற்ற புதிய கட்டடங்க திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா், பூதலூா், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பாபநாசம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் அங்கன்வாடி மையம், பொதுவிநியோக அங்காடி ஊராட்சி அலுவலகம், வகுப்பறைக் கட்டடம், பல்நோக்கு சேவைக் கட்டடம், ஒருங்கிணைந்த கிராம பொதுச் சேவை மையம், சுகாதாரக் கட்டடம், உணவு தானியங்கி கிடங்கு, சமையலறை கட்டடம் போன்ற புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக ஒரத்தநாடு வட்டம், ஆா்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த துப்புரவு பணியாளா் சின்னப்பொண்ணு குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் கருணைத்தொகையாக ரூ.2 லட்சம் என ரூ. 5 லட்சத்தை காசோலையாகவும், இதே விபத்தில் லேசான காயமடைந்த சகுந்தலாவுக்கு ரூ.75 ஆயிரத்தையும் வழங்கினாா்.

நிகழ்வில் இரா.விஜய் சரவணன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் திருமலை, வட்டாட்சியா்கள் பூங்கொடி (கும்பகோணம்), சாந்தமீனா (திருவிடைமருதூா்). மூா்த்தி (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.