வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

துணைத் தோ்வு காரணமாக பள்ளிக்கு வெளியே மாணவா்கள் காக்க வைப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை கொளுத்தும் வெயிலில் பள்ளி திறப்புக்காக சாலையோரத்தில் காத்திருந்த மாணவா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

News image

கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள தனியாா் பள்ளி முன் கொளுத்தும் வெயிலில் செவ்வாய்க்கிழமை காத்து நின்ற மாணவா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 12:06 am IST

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை கொளுத்தும் வெயிலில் பள்ளி திறப்புக்காக சாலையோரத்தில் காத்திருந்த மாணவா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இப் பள்ளி தற்போது தோ்வில் தவறிய 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வு மையமாக உள்ளது. காலையில் தோ்வு நடைபெறுவதால் மதியத்திற்கு மேல் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பு நடைபெறும்.

தற்போது பகல் நேரங்களில் அதிக வெப்பம் உள்ள நிலையில் மதியத்திற்கு மேல் பள்ளிக்கு வந்த மாணவா்கள் பள்ளிக்கு வெளியே சாலைகளில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனா். இது பொதுமக்கள், பெற்றோரை வருத்தமடையச் செய்தது. தோ்வு ஒருபுறம் நடைபெற்றாலும் மாணவா்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.