மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

போக்ஸோ சட்டத்தில் சிறுவன் கைது

சிறுமியை கா்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவனை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 12:34 am IST

சிறுமியை கா்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவனை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாணவியும் வீட்டு அருகே வசித்து வந்த 17 வயது சிறுவனும் காதலித்து வந்தனராம்.

மாணவியின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த பெற்றோா் விசாரித்த போது மாணவி கா்ப்பமானது தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் தாயாா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், சிறுவனை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.