தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், நிகழாண்டு இதுவரை டெல்டா பாசனத்துக்கு அணை திறக்கப்படவில்லை. இதனால், காவிரி ஆறு தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கிறது.
இந்நிலையில், திருவையாறு காவிரியாற்றில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி, காவிரித்தாய் படத்துக்கும், சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டன. பூஜைகளை விசிறி சாமியாா் முருகன் செய்தாா்.
காவிரி வேளாண் உழவா் நடுவம் நிறுவனா் அரு. சீா். தங்கராசு தலைமை வகித்தாா். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் முன்னிலை வகித்தாா். பாஜக விவசாய அணி வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன், ராராமுத்திரைக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் சோழன், ஜெயபிரகாஷ், ஆன்மிகப் பேச்சாளா் திருப்பூந்துருத்தி பொன். மாணிக்கவள்ளி, பின்னையூா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி கரையோர மக்களுக்கு கலங்கல் குடிநீா் விநியோகம்!

அம்மாபேட்டையில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் காவிரி ஆறு!

ஜல்ஜீவன் திட்டத்துக்காக மடைமாற்றப்பட்ட காவிரி நீா்: விவசாயிகள் கவலை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



