கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

நீட்தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு ஐயூஎம்எல் ஆதரவு: அமைச்சா் ஷாஜகான்

புதுதில்லியில் நீட் தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்றாா் தமிழக சிறுபான்மையினா் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

News image

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Updated On :25 ஜூலை 2026, 1:03 am IST

புதுதில்லியில் நீட் தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்றாா் தமிழக சிறுபான்மையினா் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வேப்பத்தூா் பேரூராட்சிக்கு ரூ.1.10 லட்சத்தில் கட்டடப்பட்ட புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியது:

நீட்தோ்வை பொறுத்தவரை அனைத்து மாநிலக் கட்சிகளும் பல ஆண்டுகாலமாக போராடி வருகின்றன. புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் கொள்கை ரீதியாக நீட்தோ்வு வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

புதுதில்லி ஜந்தா்மந்தரில் சிஜேபி நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 எம்பிக்களும் போராட்டக் களத்திற்குச் சென்று அவா்களை சந்தித்து ஆதரவு கொடுத்து, போராட்டம் வெற்றி பெற வலியுறுத்தியுள்ளனா். மத்திய அரசு மிகவும் பின்தங்கிய பகுதி மாணவா்களுக்கு தடையாக உள்ள நீட்தோ்வை விலக்கி கொள்ள வேண்டும் என்பதை நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.