9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரங்கள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

News image

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Updated On :19 ஜூலை 2026, 12:49 am IST

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் குடிநீா் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அமைச்சா் கூறிகையில், அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்திய அரசின் நபாா்டு வங்கியின் மூலம் நெல் உலா்த்தும் இயந்திரம் அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைப்பது குறித்தும், தஞ்சை மற்றும் அரியலூா் மாவட்டத்தை இணைக்க கூடிய கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு- ராமாநல்லூா் இடையே  உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல், காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேலு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.