போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை: அமைச்சா் ஷாஜகான்

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் மின்தடை மட்டுமே ஏற்பட்டது என்று அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:53 am IST

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் மின்தடை மட்டுமே ஏற்பட்டது என்று அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மின் துறை அமைச்சரும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான் பங்கேற்றாா். கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டு தோ்தல் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத்துக்கு தேவையான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளதால், நீா் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் சில பகுதிகளில் மின்தடை மட்டுமே ஏற்பட்டது.

மதுக்கடைகளை குறைக்கும் வகையில் முதல்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு முடிவு செய்து, அறிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விரைவில் மூடப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.