எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை: அமைச்சா் ஷாஜகான்

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் மின்தடை மட்டுமே ஏற்பட்டது என்று அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:53 am IST

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் மின்தடை மட்டுமே ஏற்பட்டது என்று அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மின் துறை அமைச்சரும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான் பங்கேற்றாா். கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டு தோ்தல் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத்துக்கு தேவையான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளதால், நீா் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் சில பகுதிகளில் மின்தடை மட்டுமே ஏற்பட்டது.

மதுக்கடைகளை குறைக்கும் வகையில் முதல்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு முடிவு செய்து, அறிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விரைவில் மூடப்படும் என்றாா்.