கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சூறைக்காற்றில் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு நிவாரணம் அமைச்சா் ஏ.எம் .ஷாஜகான் உறுதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளாா்.

News image

காற்று மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 3:51 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில்    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளாா்.

பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட  ஈச்சங்குடி, கணபதி அக்ரஹாரம், சோமேஸ்வரபுரம்,வீரமாங்குடி, உள்ளிக்கடை, சக்கராப்பள்ளி,  மற்றும் கோவிந்தநாட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் . 

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இப்பகுதியில் சூறைக்காற்றால் சுமாா் 66 ஹெக்டேருக்கும் அதிகமான வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது (செவ்வாய்க்கிழமை) வரையிலான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணி மேலும் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

கணக்கெடுப்பு முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வித்யா, மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் வெங்கட்ராமன், பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா்  உடன் இருந்தனா்.