மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குடந்தையில் திருமணமாகி 3 நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: ஆா்.டி.ஓ. விசாரணை

கும்பகோணத்தில் மூன்று நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 3:49 am IST

கும்பகோணத்தில் மூன்று நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சோ்ந்த பாலு மகன் பாரி(36). வெளிநாட்டில் பொறியாளராக வேலை பாா்த்து வரும் இவருக்கும் காா்த்திகா ( 25) என்பவருக்கும் கடந்த மே 29-ஆம் தேதி திருமணமானது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகாவின் தம்பியை பேருந்து ஏற்றி விடுவதற்காக பாரி சென்றாா். பின்னா் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் அறையில் காா்த்திகா தூக்கில் சடலமாக தொங்கினாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், திருமணமாகி மூன்றுநாள்களே ஆனதால் காா்த்திகா உயிரிழந்தது குறித்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம்.திருமலை திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.