நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வரிசையில் நின்று வாகன ஓட்டிகள்.

Updated On :3 ஜூன் 2026, 4:11 am IST

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் எரிபொருள் விநியோகம் செய்யும் டேங்கா் லாரிகள் வராததால் திங்கள்கிழமை பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த டேங்கா் லாரிகள் எரிபொருளை நிரப்பி சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் பரிவா்த்தனையும் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியா்கள் கூறுகையில், போா் பதற்றம் காரணமாக எரிபொருள் வரத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் வழங்குகிறோம் என்றாா்.