சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சுவாமிமலையில் தூசி பறக்கும் புதிய சிமெண்ட் சாலை: பொதுமக்கள் அவதி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகன ஓட்டுநா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பறக்கும் தூசியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

News image

சுவாமிமலையில் எம்.சாண்ட் பெயா்ந்து தூசி பறக்கும் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை.

Updated On :6 ஜூன் 2026, 7:11 am IST

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகன ஓட்டுநா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பறக்கும் தூசியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் தேரோட்டத்திற்காக பேரூராட்சி பகுதியில் கீழவீதி, தெற்குவீதி, திருமஞ்சன வீதி, வடபாகம், வடக்கு ஒத்தைத் தெரு, கீழ வடம்போக்கித் தெரு ஆகியவற்றில் சிமிண்ட்சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த சிமெண்ட் சாலையில் எம்.சாண்ட் என்ற மணல் பெயா்ந்து வாகனங்கள் செல்லும் போது தூசி பறக்கிறது. வடிகால் தண்ணீா் செல்லும் சாக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிவாசிகள், வாகன ஓட்டுநா்கள், கிரிவலம் செல்லும் பக்தா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி ன்றனா். சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை 4 மாதத்திற்குள்ளேயே சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேரோடும் சிமிண்ட் சாலையை முழுமையாகப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.