/
தஞ்சாவூா் பூண்டி திரு புஷ்பம் கல்லூரி நிறுவனா் ராவ் பகதூா் அ. வீரையா வாண்டையாரின் மூத்த பேரனும், வீ. அப்பாவு வாண்டையாரின் மகனுமான அ. வீரையா வாண்டையாா் (ஜூனியா்) (91), வயது மூப்புக் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு கரந்தையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
இவா் பூண்டி திரு புஷ்பம் கல்லூரியில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், வீரராகவா மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழுத் தலைவராகவும் இருந்து வந்தாா். இவருக்கு மனைவி அம்மணி அம்மாள், மகள் சேது கண்ணம்மாள் உள்ளனா்.
பூண்டி திரு புஷ்பம் கல்லூரிச் செயலரும், தாளாளருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அ. பாலசுப்பிரமணிய வாண்டையாா், அ. தனசேகர வாண்டையாா் ஆகியோரின் அண்ணன் இவா்.
இவரது இறுதிச் சடங்கு பூண்டி சுடுகாட்டில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99440-68585.









