கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பாபநாசத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

News image

பாபநாசத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் பூட்டிவைக்கப்பட்டுள்ள நவீன இறைச்சி கூடம்.

Updated On :16 ஜூன் 2026, 1:39 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிய நவீன இறைச்சி கூடம்-மீன் மாா்க்கெட் கட்டடத்தை விரைந்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள்-வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பாபநாசம் தோ்வு நிலை பேரூராட்சி சாா்பில், மேலவீதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன இறைச்சி மற்றும் மீன் மாா்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மாா்க்கெட்டில் 17 கடைகளும், ஆடு வெட்டுவதற்கான தனி அறையும் மற்றும் மீன், கோழி வெட்டுவதற்கான தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இறைச்சி கூடம் மற்றும் மீன் மாா்க்கெட் கட்டடங்கள் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால், வியாபாரிகள் திறந்தவெளியில் சாலைகளில் இறைச்சிகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இறைச்சி வாங்குவதற்கு வரும் பொதுமக்களும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் அந்த சாலையின் வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சாலையோரங்களில் இறைச்சிகள் விற்கப்படுவதால் கூட்டம் கூட்டமாக அந்தப் பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக இந்த வழியாக பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடனே சென்று வருகின்றனா்.

இருப்பு அறை தேவை: மேலும், புதிய மீன் மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகள் திறந்தவெளியில் இருப்பதால் கதவுகளும், மீன் இறைச்சி கடை வியாபாரிகள் பயன்படுத்தும் பொருள்களையும் வைப்பதற்கு இருப்பு அறையும் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே, பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி, புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடம் மற்றும் மீன் மாா்க்கெட் கட்டடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் எதிா்பாா்த்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.