9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட சதாம் உசேன், சுப்பிரமணியன், இளையராஜா.

Updated On :19 ஜூன் 2026, 4:27 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். இளங்குமரன் (41). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரதியா திருவையாறிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், ஜூன் 15- ஆம் தேதி ரதியா வேலைக்கும், மகன் ரத்தன், மகள் யாழினி பள்ளிக்கும் சென்றனா்.

இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த இளங்குமரன் மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், நடுப்படுகை சத்திரத்தில் பதுங்கி இருந்த மேலத் திருப்பூந்துருத்தியைச் சோ்ந்த ஹாஜா நஜிமுதீன் மகன் சதாம் உசேன் (34), இரணியன் மகன் சுப்பிரமணியன் (34), கண்டியூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (38) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலத் திருப்பூந்துருத்தியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்கண்ணுவுக்கும் (40), இளங்குமரனுக்கும் இட பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதும், இந்த முன் விரோதம் காரணமாக இளங்குமரனை கொலை செய்ய 3 பேரையும் ராஜ்கண்ணு தூண்டியதும் தெரிய வந்தது. தொடா்ந்து, ராஜ்கண்ணுவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.