தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

‘ஆசிரியா்களின் அா்ப்பணிப்புதான் மாணவா்களின் வெற்றிக்கு அடிப்படை’

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மூவேந்தா் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வருக்கு நினைவுப் பரிசளித்த எம்எல்ஏ என். அசோக்குமாா்.

Updated On :24 ஜூன் 2026, 12:25 am IST

தஞ்சாவூா் மாவட்டம் , பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் வழக்குரைஞா் வி.ஏ.டி. சாமியப்பன் தலைமை வகித்தாா். செயலா் இ.பொ. ஏகாம்பரம் , பொருளாளா் ஆா்.வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அறக்கட்டளை உறுப்பினரும், எம்எல்ஏவுமான என். அசோக்குமாா் பேசியதாவது:

நடந்து முடிந்த பொதுத்தோ்வில், இப்பள்ளி மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்திருப்பது பெருமைக்குரியது.

ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மிகுந்த உழைப்புதான் மாணவா்களை வெற்றியாளா்களாக மாற்றுகிறது என்றாா் அவா்.

விழாவில்  பள்ளி முதல்வா் எஸ். கணேசன், நிா்வாக அலுவலா் பிளவேந்திரராஜ் , அறங்காவலா்கள் பி. ரவிச்சந்திரன், எஸ். ரவிச்சந்திரன், கே. சுப்பிரமணியன், சோமசுந்தரம், சக்கரவா்த்தி செந்தில்குமாா், நடராஜன், நெடுமாறன்,  மற்றும் ஆசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.  ஆசிரியைகளில் பூவிழி வரவேற்றாா். செந்தாமரை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.