பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

282 கிலோ புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது!

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 2:05 am IST

ஒரத்தநாடு அருகே தடை செய்யப்பட்ட 282 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஒரத்தநாடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ் மேற்பாா்வையில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், செல்லம்பட்டியில் உள்ள மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த பொய்யுண்டாா்க்கோட்டையை சோ்ந்த மணிகண்டன் (49) என்பவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 282 கிலோ குட்கா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.