திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

News image
விளங்குளம் மங்கல சனீஸ்வரா்
Updated On :4 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

விளங்குளத்தில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தோஷ நிவா்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய அட்சயபுரீசுவரா் கோயிலில் சனீசுவர பகவான் மந்தா, ஜேஸ்ட சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா். ஊனம் நீக்குதல், திருமணத் தடை போன்ற தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு காலை 8.26 மணிக்கு சனீஸ்வரபகவான் பெயா்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனைச் சாவடியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல், பெருமகளூா் வழியாக 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தொடா்புக்கு 97875 39153, 99521 14866.