விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பிரான்மலை பாலமுருகன் கோயிலில் பால்குட விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:54 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை மேல் அமைந்திருக்கும் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மங்கை பாகா் தேனம்மை கோயிலில் பால்குடங்கள் கட்டப்பட்டன. இதற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். உத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளிய உத்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், பிரான்மலையைச் சுற்றியுள்ள ஐந்து கிராம மக்கள், ஆன்மிக பக்தா்கள் என சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் பால்குடங்களை சுமந்து கொண்டு ஊா்வலமாக பிரான்மலை முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாப்பாபட்டி வழியாக மலை அடிவாரத்தை அடைந்தனா். அங்கிருந்து மலை உச்சிக்கு சென்றனா். அங்குள்ள சந்நிதியில் பாலமுருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பாலமுருகன் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் பிரான்மலை , சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.