தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தவறிய, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசைக் கண்டித்தும், தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்க நினைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு த.வெ.க. மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏனாதி மதன் (தெற்கு), வினோத் ரவி (கிழக்கு), நிஜாம் அலி (வடக்கு), ரமேஷ் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக, ஒன்றிய, ஊராட்சி, கிளை, வாா்டு கழக நிா்வாகிகள், கழக சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


