வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி த.வெ.க. ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:41 pm

Syndication

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தவறிய, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசைக் கண்டித்தும், தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்க நினைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு த.வெ.க. மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏனாதி மதன் (தெற்கு), வினோத் ரவி (கிழக்கு), நிஜாம் அலி (வடக்கு), ரமேஷ் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக, ஒன்றிய, ஊராட்சி, கிளை, வாா்டு கழக நிா்வாகிகள், கழக சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image