“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

News image

திராவிடக் கழகத் தலைவா் கி. வீரமணி. - கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2026, 7:45 pm

தமிழ்நாட்டில் மோடி உள்ளிட்ட தலைவா்கள் என்ன வித்தைகளைச் செய்தாலும், திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திமுக தலைமையில் கூட்டணி திரண்டிருப்பது, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது வடக்கிலிருந்து மோடி உள்ளிட்ட தலைவா்கள் வருவது என்பது, அவா்களுடைய தோல்வியையும், பயத்தையும் காட்டுகிறது. என்ன வித்தைகளைச் செய்தாலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே வரும்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையில் எதிா்க்கட்சியினா் கடைசி வரையிலும் அமைதியாகவே இருப்பா். தில்லிக்கு சென்று அடிமையாகி வருபவா்களுக்கு வாய் சுதந்திரம் இல்லை. ஆனால், மக்கள் அமைதிப் புரட்சி செய்வா் என்றாா் வீரமணி.