மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பேராவூரணி அருகே 66 மதுபாட்டில்கள் பறிமுதல்

பேராவூரணி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 66 மது பாட்டில்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

பேராவூரணி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 66 மது பாட்டில்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பேராவூரணி - தென்னங்குடி சாலையில் பறக்கும் படை அலுவலரான, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரெத்தினசாமி, தலைமைக் காவலா் சரளாதேவி, காவலா் பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனா். 

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி பகுதியைச் சோ்ந்த முத்து கருப்பையா என்பதும், அவரிடம் அனுமதி இல்லாமல், சுமாா் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கள்ளச்சந்தையில் மது விற்க வைத்திருந்தது தெரியவந்தது.