அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

News image

சுவாமிமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:04 am IST

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை காவல்நிலையத்தில் 2025, 2026 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 750 கிலோ எடை கொண்டவைகளை அழிக்க கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று 15 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்வில், சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.