ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய கோட்டாட்சியா் ப. நித்யா.

Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியத் தோ்தல் ஆணையம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா தலைமை வகித்தாா். தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா சிறப்புரையாற்றினாா். தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள், ஊடகக் கண்காணிப்பு மையங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா்.

நிறைவாக, நூறு சதவீத வாக்குப் பதிவை எட்டும் நோக்கில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டனா்.